24 July 2014

70. அருணாசல அட்சரமணமாலை

பெயர் நினைத்திடவே பிடித்திழுத்தனை உன் 
           பெருமை யாரறிவார் அருணாசலா

நினைத்தாலே அருணாசல நாமம் சொன்னாலே   முக்தியருளும் பெருமையுடைத்து திருவண்ணாமலை.

அருணாசலம் என்ற உன் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே நான் உன்பால் ஈர்க்கப்பட்டேன்.
காந்தம் இரும்பைக் கவர்வதுபோல நீ என்னைப் பிடித்து உன்பால் சேர்த்துக் கொண்டனை.
உன் பெருமையை யாரே எடுத்துச் சொல்ல வல்லவர்? யாரும் இல்லை .

''அருணாசலமென அகமே நினைப்பவர் அகத்தை வேரறுப்பாய்'' என்றுதானே தொடங்கினார்?
அருணாசலத்தை நினைத்தாலே ஆண்டவன் அருள் கைகூடும்.

No comments:

Post a Comment