9 July 2014

55. அருணாசல அட்சரமணமாலை

நின்னெரி  எரித்தெனை  நீறாக்  கிடுமுன்
                 நின்னருள் மழை பொழி அருணாசலா
கருணைமயமானவன் இறைவன். அவனால் தன் பக்தர்களை எரித்து சாம்பலாக்க முடியுமா?
நம்முடைய மனதில் ஏற்படும் பல்வேறு உணர்வுகளும் நம் உடலின் நாடி நரம்புகளை பாதிக்கின்றன.
ஆன்ம சாதனை புரியும் ஒருவன் சரியான வழிகாட்டும், குருவின் துணை கொண்டே அப்பாதையில் நடக்கமுடியும். இல்லாவிடில் பல பாதிப்புகள் ஏற்படும்.ஆன்ம சாதனையின் உச்சத்தில் உடல் வெம்மையுறும்.

 உன்னை அடைய வேண்டும் என்ற என் தாபத்தால் ஏற்பட்ட உஷ்ணமானது என்னை எரித்து சாம்பலாக்கும் முன் உன் அருள் மழையால் என்னைக் குளிர்விப்பாய் என வேண்டுவதாகச் சொல்கிறது இக்கண்ணி.

நீறு -திருநீறு, விபூதி, வடிவம்


No comments:

Post a Comment