16 July 2014

62. அருணாசல அட்சரமணமாலை

நொந்திடாது உன்றனைத் தந்தெனைக் கொண்டிலை
      அந்தகன் நீ எனக்கு அருணாசலா

நொந்திடாது - சலித்துக் கொள்ளாமல்; கொண்டிலை - கொண்டாய்; அந்தகன் - எமன்

அருள் நகையிட்டு, தாணுவாய் நின்று,என்னை இன்பமயமாக்கி, எண்ணங்கள் அற்றுப் போகச் செய்து,
பதமான கனியாய் விளங்கிய என்னை ஏற்றாய்!

என்னைப் பார்த்து சலித்துக் கொள்ளாமல் உன் அருளால் என்னை ஆட்கொண்டாய். என் ஐம்புலன்களால் ஏற்பட்ட அகந்தைக்கு நீ காலனானாய்.

''குற்றம் செய்தல் எனக்கு இயல்பே, குணமாக்கொள்ளல் உனக்கு இயல்பே'' என்பார் வள்ளலார்.
இறைவனது அருளைப் பெறவும், ஒரு தகுதி வேண்டும். தகுதியுடையவனாகச் செய்வதும் அவனே!
அவனருள் இருந்தால் அவனைப் பெறலாம்!




No comments:

Post a Comment