27 July 2014

73. அருணாசல அட்சரமணமாலை

பொடியான் மயக்கியென் போதத்தைப் பறித்துன்
      போதத்தைக் காட்டினை அருணாசலா

பொடி - சொக்குப் பொடி( நயமாகப் பேசி நம்ப வைப்பது))
போதத்தைப் பறித்து - அறிவைப் பறித்து
போதத்தைக் காட்டினை - ஞானத்தை தந்தனை

சொக்குப் பொடி போட்டு உன் திருநாமத்தால் என்னை மயக்கினாய்!
உலக விஷயங்களில் நின்று நிலைதடுமாறும் என் அறிவைப் பறித்துக் கொண்டாய்.
ஆன்ம ஞானமாகிய பேருண்மையை எனக்கு காண்பித்தாய்.

அருணாசல நாமம் காதில் விழுந்தவுடன் தனக்கு விவரிக்க இயலாத இன்பம் தோன்றியதையும்,
அண்ணாமலை வந்து ஆன்ம ஞானம் பெற்றதையும் இக்கண்ணிகளால் உணர்த்தினார்.


No comments:

Post a Comment