30 July 2014

76. அருணாசல அட்சர மணமாலை

மலை மருந்திட நீ மலைத்திடவோ அருள்
   மலை மருந்தாய் ஒளிர் அருணாசலா

மலைத்தல் - திகைப்புறல், மயங்குதல், மலை மருந்து - மலைப்புக்கு மருந்து, மலையாகிய மருந்து

மலை மருந்து,  ஒளிர் மருந்து, அருள் மலை,  மருந்து மலை, ஒளிர் மலை, அருணாசலம்!
நம் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பது இமய மலை. இமவானின் மகள், மலைமகள் உமாதேவியார்.
பர்வத புத்திரியை இடப்பாகம் கொண்டதால் அம்மையப்பனாய்த் திகழ்பவன் சிவன்.

அண்ணாமலை வடிவில் பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாய், ஞானச் சுடராய்த் திகழ்பவனே!
எனது அகந்தைப் பிணியைத் தீர்க்கும் மருத்துவனாய் இருப்பதற்கு நீ மலைக்காலாகுமோ?
விரைவில் அருள் செய்!

எனது அகந்தையை  அழிக்கும் மருந்தாகிய ஆன்ம விழிப்புணர்வை  எனக்கு நீ அருளிய  பின்னும் நான் மயங்குவேனோ? மாட்டேன்.

மலை மருந்தாகிய  உமாதேவியார் இடப்பாகத்தில் வீற்றிருக்க எனக்கு அருள் செய்ய நீ தயங்கலாமா?

மனிதர்களின் பிறவிப்பிணி தீர்க்கும் மருந்து இறைவனே.




No comments:

Post a Comment