28 July 2014

74. அருணாசல அட்சரமணமாலை

போக்கும் வரவுமில் பொதுவெளியினில் அருட்
      போராட்டம் காட்டு அருணாசலா

போக்கும் வரவும் - தோன்றி மறைதல்.
இல் பொது வெளி - இல்லாத பரவெளியில்
அருட் போராட்டம் - நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போர்
முடிவில் வெற்றி பெறுவது சிவனருட் சக்தியே!

தோன்றி மறைதல் இல்லாத இறைவன் சிவப்பர வெளியினில் ஆனந்தத்திருநடனம் புரிகின்ற காட்சியைக் காணவேண்டுகிறார் மகரிஷி.
அகந்தை அழிதலும், ஆன்ம விழிப்புணர்வுக்கும் இடையே நடப்பதே போராட்டம்.

இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறவே பல கட்டுப் பாடுகளுடன் யோக வாழ்வை மேற்கொண்டு
சாதனைகள் செய்கின்றனர் யோகியர்.

எண்ணங்கள் தோன்றித் தோன்றி மறைகின்றன. நன்கு கவனித்து  ஒரு எண்ணம் தோன்றி
மீண்டும் மற்றொரு எண்ணம் தோன்றும் இடை வெளியில் ஆழ்ந்து மனதை நிறுத்தினால், அது
நம்மை அமைதியில், ஆனந்தத்தில் ஆழ்த்தும்! இதுவே பொது வெளி! இந்தப் பொது வெளியில்
 உலக எண்ணங்கள் நம்மை ஒரு புறம் இழுக்க, ஆனந்த அனுபவம் மற்றொரு பக்கம் ஈர்க்க  ஒரு போராட்டம் நிகழ்கிறது. இதனை நிகழ்த்தி நம்மை ஆட் கொள்பவன் அருணாசலன்.





No comments:

Post a Comment