5 August 2014

82.அருணாசல அட்சரமணமாலை

மெய்யகத் தின்மன மென்மலர ணையினான்
  மெய்கலந்திட அருள் அருணாசலா

(மெய் அகத்தின் மன மென் மலர் அணையில் நான்
மெய் கலந்திட அருள் அருணாசலா)

மென்மையான மலர்கள் தூவப்பட்ட பஞ்சணை! எங்கிருக்கிறது? ஆழ்மனதே பஞ்சணை. அமைதி எனும் மலர்கள் நிரம்பியிருக்க இறையுணர்வோடு, தன்னைத் தான் அறிந்த விழிப்புணர்வு இரண்டறக் கலந்துவிட அருள்வாய் அருணாசலா.
மெய் அகம் - ஆன்மா
இந்த ஊனுடம்பே ஆலயம், உள்ளம் பெருங் கோயில்! எண்ணங்களற்ற பெரு வெளியில், தன்னைத் தான் இழந்து மெய் மறந்து சும்மா இருப்பதே சுகம்!

No comments:

Post a Comment