23 August 2014

103. அருணாசல அட்சர மணமாலை

சிந்தித்து அருள்படச் சிலந்திபோல் கட்டிச்
   சிறையிட்டு உண்டனை அருணாசலா

சிலந்தி தன் வலையில் அகப்பட்ட இரையை அப்படியே இறுகக்கட்டி, தப்பிக்கவிடாமல் செய்து பின்னர் அதனை உண்ணும்.  அது போல அருணாசலனே உன்னுடைய அருளாகிய வலையில் என்னை மிகவும் கவனத்தோடு கட்டவேண்டுமென்று சிந்தித்துச் செயலாற்றினாய்! என்னைத் தப்பிக்க முடியாதவாறு தன்மயமாக்கிக் கொண்டாய்!
சிறையிட்டு உண்ணுதல் - தன்மயமாக்கிக் கொள்ளுதல்.

No comments:

Post a Comment