4 August 2014

81. அருணாசல அட்சர மணமாலை

மூக்கிலன் முன்காட்டு முகுரமா காதெனைத்
  தூக்கி யணைந்தருள் அருணாசலா

மூக்கு இலன் முன் காட்டும் முகுரம் ஆகாது என்னைத்
தூக்கி அணைந்து அருள் அருணாசலா


மூக்கிலன் - மூக்கில் குறைபாடுடையவன்
முகுரம் - கண்ணாடி

மூக்கில் குறைபாடுடையவனை மூக்கறையன் என்பார்கள். அவன் முன்னால் முகம் பார்க்கும் கண்ணாடியைக் காண்பித்தால் தன் அங்கக் குறையை எண்ணி மிகவும் வருந்துவான்.

அருணாசலனே! நான் அகந்தை மிகுதியாலும், ஐம்புலக் கள்வர்களின் ஆதிக்கத்தாலும்
பல குறைகளை உடையவன்.  நீயே என்னை பிரதிபலிக்கும் கண்ணாடி!

என் அருட் குருவாய் விளங்கும் உனக்கு என்னைப் பார்த்தவுடனேயே என் குற்றங்குறைகள் எல்லாம் தெரியும்!
அதனைக் காட்டி என்னை கேலி செய்யாமல், பொருட்படுத்தாமல் என்னைத் தூக்கி அணைத்துக் கொள்! என்னைத் திருத்து. உன் அருளுக்கு ஏற்றவனாய் என்னை ஆக்குவிப்பாய்.

''குற்றம்புரிதல் எனக்கு இயல்பே, குணமாக்கொளல் உன் கடமை,'' என்பார் வள்ளல் பெருமான்.








No comments:

Post a Comment