19 August 2014

95. அருணாசல அட்சர மணமாலை

95. வாஎன்று  அகம்புக்கு உன் வாழ்வுஅருள் அன்றேஎன்
      வாழ்வு இழந்தேன் அருள் அருணாசலா

அகம் புகுந்து ஈர்த்து, 'உன் அக குகையில் எதற்காக சிறை வைத்தாய்' என்று முதலிலேயே கேட்டார் அன்றோ? அதற்கான பதில் இங்கே வருகிறது.

வா என்று அழைத்து என்னை உன்னுடைய இதய வீட்டிற்குள் அழைத்துச் சென்றது  எனக்கு அருள் செய்வதற்குத்தான் என்று எனக்குப் புரிந்துவிட்டது! அந்தக் கணமே நான் என்னுடைய வாழ்வின் சுதந்திரத்தை இழந்துவிட்டேன்.  உன்னிடம் என் வாழ்வை சமர்ப்பித்தேன்! சரணாகதி அடைந்தேன், இனி 'எனது' என்பதும், 'நான்' என்பதும் இல்லை! எல்லாம் நீயேயாகி  என்வாழ்விற்கு நீயே பொறுப்பானாய்.

பூரண சரணாகதியே பக்தியின் முதல், கடைசிப் படிகளாகும்.

      

No comments:

Post a Comment