8 August 2014

85.அருணாசல அட்சர மணமாலை

மொட்டை யடித்தென்னை வெட்ட வெளியில்நீ
  நட்டமா டினையென் அருணாசலா

(மொட்டையடித்தல் - தலைமுடியை நீக்குதல் என்பது பொதுவான பொருள்,
முற்றிலும் ஒன்றை நீக்குதல், முழுவதும் கவர்ந்து கொள்ளுதல்
வெட்ட வெளி - இதயப் பர வெளி, நட்டமாடினை - நடனமாடினை)

என் அகந்தையை நீக்கி, என்னை முழுவதும் கவர்ந்து கொண்டு, தூய்மையான என் இதயப் பரவெளியில் ஆனந்த நடனம் ஆடுகின்றனை, அருணாசலா.

சிவபுராணம் 'நள்ளிருளில் நடனம் பயின்றாடும் நாதனை, தில்லைக் கூத்தனை,' அழைக்கிறது.

'அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே'
ஆன்மா என்ற சிற்றம்பலத்தில் இருந்து நடனமாடி யாவற்றையும் இயக்கும் நிறைவான பொருளே
இறைவன் என்கிறார் வள்ளலார் தன் அகவலில்.

அருணாசல அருட்பெருஞ் சோதி!


No comments:

Post a Comment