6 August 2014

83. அருணாசல அட்சர மணமாலை

மேன்மேல் தாழ்ந்திடும் மெல்லியர் சேர்ந்துநீ
    மேன்மை  யுற்றனைஎன் அருணாசலா

மேன்மேல் -மேலும்மேலும், தாழ்ந்திடும் - பணியும், மெல்லியர் -எளியவர், மேன்மை - உயர்வு

மீண்டும் மீண்டும் அகந்தையற்றதால் உன்னைப் பணிந்து தொழும் எளிமையான அடியவர்களைச்
சேர்ந்ததால் நீ உயர்வடைந்தாய், என் அருணாசலா.
எல்லாம் வல்ல ஈசனுக்கு உயர்வு, தாழ்வு என்ற பேதங்கள் இல்லை. யாரேயாகிலும் தன்னை முழுதுமாக சமர்ப்பிக்கும்  அன்பருக்கு அருள் செய்வான். மீண்டும் இறைவனுக்கு ஏது மேன்மையும், தாழ்வும்?
தன்னைப் பணியும் அன்பர்களால் அவன் மேன்மையாக்கப் படுகிறான்!

தாழ்ந்த நிலத்தில்தான் தண்ணீர் சேர்ந்து நிற்கும். அதுபோல பணிவுடையவர் உள்ளத்தில் அருள் நிறைந்து இருக்கும். எதனால்? அகந்தையற்றவர் மனதில்தான் பணிவு வரும்.
''பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
  அணியுமாம் தன்னை வியந்து'' என்ற வள்ளுவர் வாக்கை நோக்குக.




No comments:

Post a Comment