14 August 2014

90. அருணாசல அட்சரமணமாலை

ரமணன்என்று உரைத்தேன் ரோசங்கொளாது எனை
  ரமித்திடச்  செயவா அருணாசலா

யாருக்கும் தெரியாது என்மனதை மயக்கி கொள்ளை அடித்துப் போனவன் எவன்? என்று முந்தைய பாடலில் கேட்டவர் இப்பாடலில் பதில் சொல்கிறார்.

இது வரையிலும் யாருக்கும் தெரியாத ரகசியம் அது! சொல்லி விடட்டுமா? அதுதான், அவன்தான்,
'கருணை மாமலை, ஈன்றிடும் அன்னையிற் பெரிதருள் புரிபவன், குரு உருவாய், கருணைக் கடலாய்,
எனக்கு அருள் நகையிட்டுப் பார்த்தவன், என் பித்தம் தெளி மருந்து, மலை மருந்து,' அனைத்து உலகிற்கும் இதத்தைத் தரும் ரமணன்!
ஓ என்னைக் காட்டிக் கொடுத்து விட்டாயா என்று கோபிக்காமல், 'மெய் அக மென்மலர் அணையில் தன்மயமானதை அனுபவிக்க வாராய், என் அருணாசலனே'!


No comments:

Post a Comment