12 August 2014

88. அருணாசல அட்சர மணமாலை

யவன் என் வாயில் மண்ணினை அட்டி
   என் பிழைப்பு ஒழித்தது அருணாசலா

இறைவனின் அருட் செயலை பரிகசிப்பது போல்  வாழ்த்துகிறார் மகரிஷி. சாதாரணச் சிறுவனாக இருந்த தன்னை இறைவன் தன் திருவருளால் ஆட்கொண்டதை இங்கு எடுத்துச் சொல்கிறார்.
என் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டான் என்று கூறக் கேட்கிறோம். இங்கோ 'என் வாயில் மண்ணினை அட்டியது.... பிழைப்பு ஒழித்தது....யார் என்று கேட்காமல் 'யவன்' என்கிறார்.

விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அகந்தை வழிச் செல்லக்கூடிய  மனதை 'நான் யார்' என்று விசாரித்து அறிதல் மூலம் தெளிவுறச் செய்தாய், இறைவா, இந்தப் பேறு யார்க்கு வாய்க்கும்? என்பதையே,'என் வாயில் மண்ணினை அட்டி ' உலக வாழ்வாகிய அல்லல் பிழைப்பிலிருந்து என்னைக்
காப்பாற்றி விட்டாய் என்று இரு பொருள் தோன்றப் பாடுகிறார்.








No comments:

Post a Comment