20 August 2014

96. அருணாசல அட்சர மணமாலை


96. விட்டிடிற்  கட்டமாம்  விட்டிடாது உனை  உயிர்
      விட்டிட அருள்புரி அருணாசலா

யாரை விட்டால் யாருக்குக் கஷ்டம்? இறைவன் அடியாரைக் கை விட்டுவிட்டால் அடியார்களுக்கு மாறாத கஷ்டம்; அடியார்கள் இறைவனை மறந்துவிட்டால் அப்போதும் அவர்களுக்கே துன்பம்.
எனவே அருணாசலா, உயிர் உடலைவிட்டுப் பிரியும் போதும் என்னைக் கை விட்டுவிடாதே. உன் நினைவிலேயே  என் உயிர் பிரிய அருள்வாய்.

அபிராமிப் பட்டர் என்ன சொல்கிறார்? காலன் என்மேல் வரும்போது,'வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும், உங்கள் திருமணக்கோலமும், சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்தென்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து வெளிநிற்க வேண்டும்,' என்றும், 'உயிர் உறவு அற்று அறிவு மறக்கும்
பொழுது என் முன்னே வரல் வேண்டும்,' என்று அபிராமி அம்மையை வேண்டுகிறார்.


No comments:

Post a Comment