3 August 2014

80. அருணாசல அட்சரமணமாலை

முடியடி காணா முடிவிடுத் தனைநேர்
   முடிவிடக் கடனிலை அருணாசலா

முடி - அகந்தையாகிய சிக்கல் முடிச்சு
காணாமுடி - ஆன்ம வடிவம்
நேர்விடுத்தனை - நேரிடையாக சேர்ப்பித்தாய்
கடனிலை - கடமை அல்லவா
அனை நேர்- அன்னைக்கு நிகராக

அன்னைக்கு நிகரான அருணாசலனே!  ஆரம்பமும், முடிவும் அற்ற உன்னைக் காணத் தடையாக இருந்த சிக்கலான அகந்தை முடிச்சை அவிழ்த்து நீக்கி, நேரிடையாக உன்னை வந்து அடையும்படிச் செய்தாய்.

பிரமனும், திருமாலும் முயன்றும் காண இயலாத உன்னுடைய திருவடிவைக் காணுமாறு என் அஞ்ஞானத்தை நீக்கி அருள் புரிந்தாய்!

''ஆதியனே அந்தம் நடுவாகி நின்றானே,'' ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதியை யாம் பாட,'' என்கிறது திருவாசகம்.

''படிஅடி வான்முடி பற்றினும் தோற்றா
அடிமுடி எனும்ஓர் அருட்பெருஞ் சோதி'' - அகவல், திருவருட்பா, வள்ளலார்.




No comments:

Post a Comment