9 August 2014

86. அருணாசல அட்சர மணமாலை

மோகந் தவிர்த்துன் மோகமா வைத்துமென்
      மோகந் தீராய் என்அருணாசலா

இன்பம் தருகின்ற உலகப் பொருட்கள் மேல் எனக்குள்ள ஆசைகளை நீக்கி
உன் மீது பக்தியால் பித்தடையச் செய்தாய். எத்தனை முயன்றாலும் உன் மீது நான் வைத்துள்ள மோகத்தை விட முடிய வில்லை! அருணாசலனே உன் மீது நான் கொண்டுள்ள ஆசையை நீக்கி
ஆன்மப் பேரின்பத்தில் முழுமையாக மூழ்குமாறு அருள் புரிவாய்.

'ஈசனோடாயினும் ஆசை அறுமின்' என்பது திருமூலரின் திருமந்திர வாக்கு.

No comments:

Post a Comment