31 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமால் பேறு
                                    - சொல்லரிக்குக்
காற்பேறு கச்சியின்முக் காற்பேறு இவண்என்னும்
மாற்பேற்றின் அன்பர் மனோபலமே -

"திருமால்பூர்" என வழங்கப்படும் இவ்வூர் காஞ்சிபுரம் - அரக்கோணம்  ரயில் பாதையில் உள்ளது.
திருமால் கோயில்களுக்கு பெயர் பெற்றதலம் காஞ்சி. அங்கே உலகளந்த பெருமாள் கோயில் உள்ளது.
அதை நினைவில் கொண்டு, "சொல் அரிக்கு கச்சியின் காற் பேறு," என்றார். காஞ்சியில் உலகளந்த
பெருமாளாய் 'கால் பங்கு' பெருமை பெற்றார் திருமால். " திருமாற் பேறு," என்ற இத்தலத்தில் மீதமுள்ள 'முக்கால் பங்கு' பெருமை கிடைத்ததாம்! அதனால் 'முக்காற்பேறு' இவண்- என்றார். இவண் என்பது - திருமால் பேறு - என்ற இடம். முக்கால் பேறு எப்படிப் பெற்றார்?

திருவீழிமிழலை என்ற தலத்திற்குரிய வரலாறு இங்கும் கூறப்படுகிறது. திருமால் ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சித்து சிவபெருமானை வழிபடும் போது ஒரு நாள் ஒருமலர் குறைய தன் கண்மலரை
அர்ப்பணித்து தன் சக்ராயுதத்தைப் பெற்றதாகவும் அதனால் 'முக்கால் பேறு' பெற்றதலம் "திருமாற்பேறு"எனவும் குறிப்பிடப்படுகிறது.  இவ்விடத்தில் சிவபெருமான் அன்பர்களுக்கு மனவலிமை தருபவனாய் வீற்றிருக்கிறான். இறைவன் பெயர் மால்வணங்கீசர்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி












No comments:

Post a Comment