20 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

தொண்டை நாடு - திருவேகம்பம் -காஞ்சி

                                    - கண்ணார்ந்த
நாகம்ப ராம்தொண்ட நாட்டில் உயர்காஞ்சி
ஏகம்பம் மேவும்பே ரின்பமே -

அழகு பொருந்திய தொண்டைநாட்டில் மிக உயர்ந்ததாகப் போற்றப்படும் ஊர் காஞ்சிபுரம்.
காஞ்சிமாநகரில் ஏகாம்பர நாதர் என்ற பெயரோடு அன்பர்களின் பேரின்பத்திற்குக் காரணமானவனாக
விளங்குகிறார் சிவபெருமான். ஏகம்பன் என்றால் காஞ்சிபுரத்துச் சிவன்.

காஞ்சிபுரம் என வழங்கப்படுகிறது. பஞ்ச பூதத் தலங்களில் ப்ருத்வித் தலம். (மணல் லிங்கம்) உமாதேவியார் சிவபெருமானைப் பூசித்து 32 அறங்களை வளர்த்தார் எனப்படுகிறது.க்ஷேத்திர வெண்பா பாடிய ஐயடிகள் காடவர்கோன் அரசாண்ட தலம். சாணக்கியர், பரிமேலழகர், பொய்கையாழ்வார், சியாமா சாஸ்திரிகள் வாழ்ந்த ஊர். சுந்தரர் தனக்கு கண்பார்வை மீண்டதைக் குறித்து அழகிய திருப்பதிகம் பாடியுள்ளார்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

1 comment: