13 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

வடுகூர்
                                                   - நேசமுற
வேற்றா வடுகூர் இதயத்தி னார்க்கென்றும்
தோற்றா வடுகூர்ச் சுயஞ்சுடரே-

(நேசமும் உறவும் ஏற்றா -நட்பும் உறவும் ஏற்றுக் கொள்ளாத, வடுகூர் இதயம் -குற்றங்கள் செய்யும்
இயல்புடையவர்) மனதிலே ஆழ்ந்த வடுக்களை ஏற்படுத்தக் கூடிய குற்றங்கள் செய்பவரை நட்பும், உறவும் ஒதுக்கித் தள்ளும். அத்தகையோருக்கு இறைவன் என்றுமே புலப்படாதவன். தானேதானாய் சோதிமயமாய் காட்சியளித்தாலும் தீயோரின் கண்களால் அறியப்பட மாட்டாதவன். வடு -கூர் இதயத்தினார்க்கு வடுகூர்ச் சிவபெருமான்  அரிதானவன்.

பாண்டிச்சேரி சாலையில் வளவனூருக்கு அடுத்து இத்தலம் உள்ளது. வடுகர் வழிபட்ட தலம் ஆதலால்
வடுகூர்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment