6 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநெல்வெண்ணெய்
                                          - அன்றகத்தின்
நல்வெண்ணெய்  உண்டு ஒளித்த  நாரணன்வந்து ஏத்துகின்ற
நெல்வெண்ணெய் மேவுசிவ நிட்டையே -

இந்த இரு வரிகளில்  கோகுலத்தில் கண்ணன் செய்த லீலையைச் சொல்கிறார் வள்ளலார்.
முன்னொரு காலத்தில் வீடுகள்தோறும் சென்று யாரும் அறியாமல் வெண்ணெய் திருடித் தின்று கோபியர் கண்களுக்குப் புலப்படாமல் ஒளிந்து லீலைகள் செய்தான் கண்ணபிரான்.அந்தத் திருமாலாகிய நாராயணன் வந்து வழிபாடு செய்த திருநெல்வெண்ணெய் சிவயோகமே உம்மை வணங்குகிறேன்.

கண்ணனுக்கு வெண்ணெய்
இவ்வூர் 'நெய்வெணை' என்று வழங்கப்படுகிறது. உளுந்தூர்ப் பேட்டை ரயில் நிலையத்திலிருந்து  ஆறு கி. மீ. தொலைவில் உள்ளது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment