5 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமுதுகுன்றம்

                                  - தேவகமாம்
மன்றமமர்ந்த வளம்போல் திகழ்ந்துமுது
குன்றம் அமர்ந்த அருட் கொள்கையே -

தேவகமாம் மன்று- சிதம்பரம், வளம் - நன்மை.
சிதம்பரம் எனும் திருத்தலத்தில் அமர்ந்து அன்பர்களுக்கு அருள் வளம் அளிப்பது போல் திருமுதுகுன்றத்திலும் அருள்செய்வதையே கொள்கையாக உடைய சிவபெருமானுக்கு வந்தனங்கள்.

இவ்விடமே விருத்தாசலம். விருத்த காசி எனப்படும் இவ்வூர் காசியினும் சிறந்ததாகும்.
விருதம் - பழமை, உசலம் -மலை. - பழமலை - முதுகுன்றம்.
ஆழத்துப் பிள்ளையார் சிறப்பு. மூவர் பாடல் பெற்றதலம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

No comments:

Post a Comment