3 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவதிகை வீரட்டம்
                                     - வார்கெடிலச்
சென்னதிகை ஓங்கித் திலகவதி யார்பரவும்
மன்னதிகை வீரட்ட மாதவமே -

திருநாவுக்கரசரின் தமக்கை திலகவதியார். அவர் தங்கி சிவபெருமானை வழிபட்டு வந்த தலம் வீரட்டம்.
இத்தலம் கெடிலம் ஆற்றின் வடகரையில் உள்ளது.
தன்னுடைய தவப்பயனால் கெடிலம் நதிக்கரை திருவதிகை வீரட்டத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு திலகவதியார் தொண்டாற்றினார்.

அப்பர் பதினாறு பதிகங்கள் பாடியுள்ளார். அட்ட வீரத்தலங்களில் ஒன்று.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment