2 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருச்சோபுரம்
                                                                  - தீங்குறும் ஒன்
னார்புரத்தை வெண்ணகைத்தீ யாலழித்தாயென்று தொழச்
சோபுரத்தின் வாழ்ஞான தீவகமே -

தாரகாசுரனின் புதல்வர்கள் செய்த தவத்திற்கு இரங்கி பிரமதேவர் அவர்கள் விரும்பியவாறு பொன், வெள்ளி, இரும்பினாலாகிய பறக்கும் கோட்டைகளை அருளினார். அந்த முப்புரங்களையும் சிவபெருமான் தன் வெண்பற்கள் தோன்றச் சிரித்து, தன் கோபத்தீயால் அழித்தாரென்று அடியார்கள் தொழ திருச்சோபுரத்தில் ஞானவிளக்காய் அருள் செய்கிற சிவபெருமானுக்கு வந்தனங்கள்.

தியாகவல்லி,சோபுரம் என வழங்கப்படுகிறது. இத்தலம் மணலினால் மூடப்பட்டிருந்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட்து.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

No comments:

Post a Comment