18 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவாமாத்தூர்

                                         - சூர்ப்புடைத்த
தாமாத்தூர் வீழத் தடிந்தோன் கணேசனொடும்
ஆமாத்தூர் வாழ்மெய் அருள்பிழம்பே -

சூரபத்மன் என்ற அசுரனின் ஊரில் ஒரு மாமரம் இருந்தது. அது தன்னை நெருங்கியவரைத் தாவிப் பற்றிக் கொல்லும் மரம். அதுவே அவ்வூரின் காவல் மரம். இந்த மரத்தை வீழ்த்தி, சூரபன்மனை வெற்றிகொண்ட முருகப் பெருமானும், கணேசனும் அருட்பிழம்பான சிவபெருமானுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இடம் திருஆமாத்தூர்.
இவ்வூர் பம்பை எனும் ஆற்றங்கரையில் உள்ளது. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் சமாதி இங்கு உள்ளது. மூவர் பாடல் பெற்ற தலம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment