29 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்


வன்பார்த்தான் பனங்காட்டூ 
                                           - பூத்தவிசின்
ஆர்த்தான் பனகத்த வனிந் திரன் புகழ்வன்
பார்த்தான்  பனங்காட்டூர் பாக்கியமே -

'பூத் தவிசின் ஆர்த்தான்/ பனகத்தவன்/ இந்திரன்/ புகழ்' --பூத்தவிசு-தாமரைமலர், பனகத்தவன் -திருமால் (பன்னகம்- பாம்பு)
தாமரை மலரில் அமர்பவனாகிய பிரமனும், பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும், இந்திரனும்
புகழ்கின்ற 'வன்பார்த்தான் பனங்காட்டூரில்' எழுந்தருளியிருக்கும் செல்வமே சிவபெருமானே!

இவ்வூர் திருப்பனங்காடு என்று வழங்கப்படுகிறது. பனைமரங்கள் நிறைந்த தலமாய் இருந்திருக்க வேண்டும். அகத்தியர் வழிபட்ட தலம். இறைவன் -பனங்காட்டீசர், தலமரம் - பனை.

திருவருட்பிரகாச வள்லலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி







No comments:

Post a Comment