24 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

கச்சி அனேகதங்காவதம்
                                          - சேர்ந்தவர்க்கே
இங்கார் பதஞ்சற்றும் இல்லாத அனேக
தங்கா பதஞ்சேர் தயாநிதியே -

அனேகதம் என்றால் யானை. யானை முகத்தை உடைய விநாயகர் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டார்.
இறைவன் பெயர் அனேகதங்காபதேஸ்வரர்.
அனேகதங்காவதம் என்ற தலத்தில் கோயில் கொண்டிருக்கும் கருணைக்கடலான இறைவனின்
பாதமலர்களைப் பற்றிக் கொண்டவர்க்கு துன்பத்தில் அழுந்தும் நிலை வராது. (இங்குதல் எனில் அழுந்துதல் என்று பொருள். இங்கு+ ஆர்+ பதம்- துன்பத்தில் அழுந்திய நிலை.)

காஞ்சிபுரத்தில் உள்ள ஐந்து பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று.வயல் மத்தியில் உள்ளது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment