15 January 2014

திருப்பாதிரிப்புலியூர்


திருப்பாதிரிப்புலியூர்

                                      - மாணுற்ற
பூப்பா திரி கொன்றை புன்னைமுதற் சூழ்ந்திலங்கும்
ஏர்ப்பா திரிப்புலியூர் ஏந்தலே - 
சிறந்த அழகும் பொன்னிறமும் உடைய பாதிரி, கொன்றை, புன்னை மலர்கள் பூத்துச் சொரியும் 
மரங்களால் சூழப்பெற்ற திருப்பாதிரிப் புலியூர்த் தலைவனே உம்மை வணங்குகின்றோம்.

இங்குள்ள பாடலீசுவரர் சிவன் கோயிலில் தலமரம்  பாதிரி. எனவே திருப்பாதிரிப் புலியூர்.
திருநாவுக்கரசரை சமணர்கள் கல்தூணில் கட்டிக் கடலில் தள்ளிவிட அவர் 'சொற்றுணை 
வேதியன்' எந்ற நமச்சிவாயத் திருப்பதிகம் பாடி கரையேறப் பெற்ற தலம்.

கடலூர் என்று வழங்கப்படுகிறது. இறைவந் பெயர் தோன்றாத் துணைநாதர், இறைவி தோகையம்பிகை.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி





2 comments:

  1. பாடலுடன் கருத்தும் அருமை.

    amas32

    ReplyDelete