27 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

மாகறல்
                                      - தோயுமன
யோகறல் இலாத்தவத்தோர் உன்ன விளங்குதிரு
மாகறலில் அன்பர்அபி மானமே -

(தோயும் மனம் யோக அறல் இலா தவத்தோர்) யோகம் என்றால் ஒன்று சேர்தல் என்று பொருள். மனமானது இறைவனுடன் தோய்தல், அதாவது இரண்டறக் கலத்தல்- ஒருமைப் படுதல். அதுவே யோகம். தவம் செய்வோர் அந்நிலையிலிருந்து நீங்குவது இல்லை. அத்தகையவர் வாழ்வதால் சிறப்புப் பெற்று விளங்கும்  'மாகறல்' என்னும் தலத்தில் அன்பர்களுக்கு அன்பனாய் விளங்குகிறான் சிவபெருமான்.

செய்யாற்றின் கரையில் உள்ள தலம். சுயம்பு மூர்த்தி. திங்கள் தரிசனம் சிறப்பு. இறைவன் பெயர்
அடைக்கலங்காத்த நாதர்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

No comments:

Post a Comment