22 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்.

கச்சித் திருமேற்றளி
                                   - ஆகுந்தென்
காற்றளிவண் பூமணத்தைக் காட்டும் பொழில்கச்சி
மேற்றளிவாழ் ஆனந்த வீட்டுறவே -

கச்சிமேற்றளி - காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் உள்ள 'பிள்ளையார் பாளையம்' என்ற இடத்தில்
இக்கோயில் உள்ளது. திருமேற்றளி எனவும் வழங்கப்படுகிறது. இவ்வூரில் தென்றல் காற்று சுமந்து செல்லும் நறுமணம் நிறைந்த மலர்ப் பொழில்கள் உள்ளன. தேனுண்ணும் வண்டுகள் இம்மலர்களை நாடிச் செல்லுகின்றன. இறைவனிடம் பக்தி செலுத்துவதே பேரின்ப வீட்டின் திறவுகோல் என்பர். பக்தி செய்வோர் எல்லாருக்கும் அவன் உறவினன் ஆகிறான். வண்டுகள் மலர்களை நாடிச் செல்வது போலும், தென்றல் காற்று மலர் மணத்தை சுமப்பது போலும் பக்தர்கள் இறைவனை நாடிச் செல்கின்றனர்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment