28 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

என்னுள்ளே மறைந்து கொண்டு உன்னை எங்கும் தேடச் செய்கின்றாய்.
உன்னை என்னுள் தேடித் தேடிக் களைத்தேன் எம்பெருமானே!
நீ மனம் வைத்தால்தான் உன்னை அறிய முடியும் என அறிந்தேன்.

                             திருவோத்தூர்
                                                  - ஓகையிலா
வீத்தூர மாவோட மெய்த்தவர்கள் சூழ்ந்த திரு
ஓத்தூரில் வேதாந்த உண்மையே -

இறைவன் வேதத்திற்குப் பொருள் கூறிய இடம் என்பதால் 'ஓத்தூர்' ( ஓதும் ஊர் ) என்ற பெயர் வந்தது.
தவ வாழ்க்கையை மேற்கொள்வது என்பது எல்லோராலும் இயலாத ஒன்று. அது கட்டுப்பாடான நெறிமுறைகளைக் கொண்டது. அவ்வழியைப் பின்பற்ற முடியாதவர்களின் மன வலிமை அழிய, மகிழ்ச்சி
தூரஓடுகிறது. வேதங்களுக்கு பொருள் கூறிய இறைவன் எழுந்தருளியுள்ள திருவோத்தூர் இறைவனை மெய்யான தவம் செய்யும் வலிமை உடையவர்கள் சூழ்ந்திருக்கின்றனர்.

இவ்வூர் ஆலயம் செய்யாற்றின் வடகரையில் உள்ளது. இறைவன் - வேதபுரீஸ்வரர்.
இறைவி - திரிபுவனநாயகி.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி






No comments:

Post a Comment