19 January 2014

சிவத்தலங்கள் - திருவருட்பா

திருவண்ணாமலை
                                    - யாமேத்தும்
உண்ணா முலையாள் உமையோடு மேவுதிரு
அண்ணா மலைவாழ் அருள்சுடரே -

நாங்கள் வழிபடும் உண்ணாமுலை என்ற திருநாமத்தோடு விளங்குகின்ற உமையம்மையோடு
காட்சிதரும் திருவண்ணாமலையில் கோயில் கொண்டுள்ள அருட்சுடரே,அருணாசலேஸ்வரனே!
உன்னைப் போற்றி வணங்குகிறோம்.

பஞ்சபூதத் தலங்களில் நெருப்புக்குரிய தலம். காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி.
பிறப்பதும் இறப்பதும் நம் கையில் இல்லை. ஆனால் மனதால் நினைத்தாலே முக்திதரும் தலம் திருவண்ணாமலை. அருணகிரிநாதருக்கு முருகன் காட்சியளித்த தலம். மகரிஷி  ஸ்ரி ரமணர் தவம் செய்த திருத்தலம். கார்த்திகை தீபத்திருவிழாவும், கிரிவலமும் சிறப்புடன் நடை பெறும் பெருமைவாய்ந்தது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட் பெருஞ்சோதி

திருஞானசம்பந்தப் பிள்ளையார் அருளிச்செய்த  'உண்ணாமலை உமையாளொடு உடனாகிய'
என்ற தேவாரப் பாடலைக் கேட்டு மகிழுங்கள். சுட்டி கீழே:-


http://gaana.com/playlist/karunanidhi-2-emmkay-thevaram-by-dharumapuram-swaminathan

No comments:

Post a Comment