10 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவெண்ணெய் நல்லூர்
                                               - இடையாது
சொல்லூரன் தன்னைத் தொழும்புகொளும் சீர் வெண்ணெய்
நல்லூர் அருள்துறையின் நற்பயனே -

சிவபெருமானின் திரு உள்ளத்தால் தோற்றுவிக்கப்பட்டவர் சுந்தரர். அவர் இறைவனுக்குப் பூமாலை தொடுத்து சமர்ப்பிக்கும் பணியைச் செய்து வந்தார். ஒருமுறை உமையம்மையின் சேடியரைக் கண்டு
மனம் தடுமாறியதால் பூமியில் பிறக்குமாறு அவரை சிவபெருமான் பணித்தார். திருமுனைப்பாடி நாட்டுத்
திருநாவலூரில் பிறந்த சுந்தரர் நம்பியாரூரர் என்ற பெயருடன் வளர்ந்து, திருமண வயது எய்தி சடங்கவியாரைத் திருமணம் செய்து கொள்ள முற்பட்டபோது சிவபெருமான் திருவெண்ணெய் நல்லூரில் அவருக்கு காட்சி அளித்து ஆட்கொண்டான். திருவெண்ணெய் நல்லூர் ஆலயத்தின் பெயர்
அருள்துறை. இந்த செய்தியே மேற்கண்ட இருவரிகளில் சொல்லப்படுகிறது.

தங்குதடையின்றி செந்தமிழ்ச் சொற்களால் பாடும் திறன் பெற்ற நம்பியாரூரனை அடிமை கொண்ட திருவெண்ணெய் நல்லூர், அருள்துறை இறைவனே உம்மை வணங்குகிறேன்.

சிவபெருமானால் ஆட்கொள்ளப் பெற்ற சுந்தரர் முதல் தேவாரப் பாடல் பாடிய தலம். சிவபெருமான்
'பித்தா' என்று அடியெடுத்துக் கொடுக்க தன்னை மறந்து சுந்தரர் பாடிய பாடல் 'பித்தா பிறை சூடி' என்ற பாடலாகும்.

பண்ருட்டியிலிருந்து அரசூர் செல்லும் சாலையில் உள்ளதலம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி



No comments:

Post a Comment