1 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள் -1.1.2014


திருத்தினைநகர்
                                                               - நம்புவிடை
ஆங்கும் தினையூர்ந் தருளாய் என்று அன்பர்தொழுது
ஓங்கும் தினையூர் உமாபதியே -

திருத்தினைநகர் வாழ் அன்பர்கள் உமாபதியாகிய ஈஸ்வரனைத் தொழுது என்ன வேண்டுகிறார்கள்?
(நம்பு- விரும்புதல், ஆங்கும் - மனநிறைவு)(விடை-காளை) இறைவன் விரும்பி ஏறும் காளை மன நிறைவு அடையுமாறு  உண்ண தினைப் பயிர் நன்கு விளைய அருள் புரிக என்று இறைவனை வணங்கி வேண்டுகிறார்களாம்! தாங்கள் உண்ண அதிகம் விளைய வேண்டும் என்னாது உயிரினங்கள் வயிறு நிறைய வேண்டும் என வேண்டுவது எண்ணி இன்புறத்தக்கது. தினைநகர்-தினையூர் என வந்தது.  

தீர்த்தனகிரி என்று அழைக்கப்படுகிறது. பெரியான் என்ற உழவனுக்கு சிவபெருமான் தினை விளைத்து அருள் புரிந்த காரணத்தால் தினைநகர் என்ற பெயர் வந்தது. இங்குள்ள இறைவியின் பெயர் கருந்தடங்கண்ணி. 
கருந்தடங்கண்ணியும், சிவக்கொழுந்தீசரும் அனைவருக்கும் நல்ல ஆரோக்யத்தையும், அமைதியும்
மனநிறைவும் தரும் வாழ்க்கையையும் அருள்வார்களாக.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி




No comments:

Post a Comment