4 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநாவலூர்
                              - பன்னரிதாம்
ஆவலூர் எங்களுடைய ஆரூரன் ஆரூராம்
நாவலூர் ஞானியருள் ஞாபகமே -

திருமுனைப்பாடி நாட்டிலே திருநாவலூர் ஒரு ஊர். அவ்வூரில் வாழ்ந்து வந்த சடையனாருக்கும், இசைஞானியாருக்கும் சிவபெருமான் திருவருளால் பிறந்தவர் சுந்தரர். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர்  நம்பியாரூரர்.
 ஆரூரன் என்றழைக்கப்பட்ட சுந்தரர் பிறந்த ஆரூராம் திருநாவலூரின் புகழை மிகுந்த ஆவலுடன் சொல்ல விரும்பினாலும் சொல்லுவதற்கு வார்த்தைகள் கிடைக்காத புகழ் உடையது. அவ்வூரில் ஞானியர்களின் ஞானமாக விளங்குகிறான் சிவபெருமான்.

திருமாநல்லூர் என்று வழங்கப்படுகிறது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


No comments:

Post a Comment