30 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கடைமுடி

                                                              - மாவின்
இடைமுடியின் தீங்கனிஎன்று எல்லின் முசுத்தாவும்
கடை முடியில் மேவும் கருத்தா -

திருக்கடைமுடி என்ற ஊரில் சிவபெருமான் கோயில் கொண்டிருக்கிறார்.
அவ்வூரில் மாமரங்கள் உண்டு. விடியற்போதில் இளங்கதிரவனின் ஒளி மாமரத்தின்
உச்சியிலும், கிளைகளுக்கு இடையேயும்  தோன்ற அவ்வொளியை இனிய மாம்பழம்
என்று நினைத்துப் பறிக்க கருங்குரங்குகள் தாவி ஓடுமாம். (பொன்னிறமான காலைச்
சூரிய ஒளியை மாங்கனி என எண்ணி கருங்குரங்குகள்  தாவி ஓடும்)
எல்லி - என்றால் சூரியன். முசு- கருங்குரங்கு

இப்பதி இப்பொழுது கீழையூர் என்றும் கீழூர் என்றும் வழங்கப் பெறுகிறது.

இறைவன் : கடைமுடி நாதேஸ்வரர்
இறைவி    : அபிராமியம்மை

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

No comments:

Post a Comment