1 April 2013

திருவருட்பா - பிரார்த்தனை மாலை


வேல்கொண்ட கையும் விறல்கொண்ட தோளும்
விளங்கு மயில்
மேல்கொண்ட வீறும் மலர்முக மாறும்
விரைக்கமலக்
கால்கொண்ட வீரக்கழலும் கண்டாலன்றிக்
காமனெய்யும் 
கோல்கொண்ட வன்மை யறுமோ தணிகைக்
குருபரனே.                          - திருவருட்பிரகாச வள்ளலார்

திருத்தணிகை மலைமீது எழுந்தருளியுள்ள குருபரனே! வேலேந்திய தங்கள் திருக்கரத்தையும்,வலிமை வாய்ந்த தோளையும், மயில் மீது அமர்ந்திருக்கும் பொலிவையும்,  மலர் முகங்கள்  ஆறினையும், மணங்கமழும் திருவடியில் அணிந்துள்ள வீரக் கழலையும் தரிசனம் செய்தால் அன்றி மன்மதன் செலுத்தும் காமபாணங்களிலிருந்து விடுபட முடியாது. எனவே விரைவில் வந்து தரிசனம் தந்தருள்வீராக.

No comments:

Post a Comment