11 April 2013

திருவருட்பா


அருள் திறத்து அலைச்சல்

செவ்வண்ண  மேனித்  திருநீற்றுப்  பேரழகா

எவ்வண்ணம்  நின்வண்ணம்  என்றறிதற்  கொண்ணாதாய்

உவ்வண்ணன்  ஏத்துகின்ற  ஒற்றிஅப்பா  உன்வடிவம்

இவ்வண்ணம்  என்றென்  இதயத்  தெழுதேனோ.

                       - திருவருட்பிரகாச வள்ளலார்

சிவந்த மேனியிலே திருநீற்றை அணிந்த ''திருநீற்றுப் பேரழகா"
உன்  இயல்பு எத்தகையது என்று யாரும் அறிய முடியாதவனே
கருடனை ஊர்தியாய் உடைய திருமால் துதிக்கின்ற ஒற்றி அப்பா
உன் வடிவம் இப்படிப் பட்டது என்று என் உள்ளத்தில் எழுதாது விடுவேனோ?

உன் வண்ணம் என் இதயத்தில் எழுதப்பட்டு விட்டது.

No comments:

Post a Comment