15 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

3. திருநெல் வாயில்

                                            - வாழ்க்கைமனை
நல்வாயில் எங்கும் நவமணிக் குன்று ஓங்குதிரு
நெல்வா வாயின் நின்றொளிரும் நீள்ஒளியே -

வாழ்வுக்கு உரிய வீடுகளின் வாசல் எங்கும்( நவமணிகள்) ஒன்பது வகை  உயர்ந்த மணி
வகைகள் மலைபோலக் குவிந்திருக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருநெல் வாயில்
என்ற தலத்தில்  நிலைபெற்ற ஒளியாய்  வீற்றிருக்கும்  சிவபெருமானே!
உன்னை வணங்குகிறேன்.

இத்தலம் சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை நகர் செல்லும் சாலையில் (பல்கலைக் கழகத்திற்குள்
நுழையாமல்) கவரப்பட்டு சாலை சென்று, பேரணாம்பட்டுச் சாலையில் உள்ளது. இதன் மற்றொரு பெயர் சிவபுரி என்பதாகும். திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று பாடியுள்ளார்.

இறைவன் திருநாமம் :உச்சிநாதேஸ்வரர்
இறைவி: கனகாம்பிகை

கண்வமகரிஷி வழிபட்டதலம்.
  

No comments:

Post a Comment