9 April 2013

திருவருட்பா - கருணைமாலை


வண்ணனே அருள் வழங்கும் பன்னிரு
கண்ணனே அயில் கரங்கொள் ஐயனே
தண்ணனேர் திருத்தணிகை வேலனே
திண்ணம் ஈதருள் செய்யுங்  காலமே
               - திருவருட்பிரகாச வள்ளலார்

குளிர்ச்சி பொருந்திய திருத்தணிகை வேலனே!அழகனே! அருள் பொழியும் பன்னிரு கண்கள் உடையவனே!கூர்மையான வேலைக் கையில் ஏந்தியவனே! நீ எனக்கு அருள் செய்வதற்கு உரிய காலம் நிச்சயமாக இதுவேயாகும். உடன் வருவாய்!

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment