26 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

சீர்காழி

                                                          - அருகாத
கார்காழில்  நெஞ்சக்  கவுணியர்க்குப்  போதமருள்
சீர்காழி  ஞானத் திரவியமே.

சீர்காழிப் பதியில் கோயில் கொண்டிருக்கும் சிவஞானச் செல்வமே!
சிவபெருமானே! சுருங்கி, காழ்ப்பு இல்லாத, அருள் நெஞ்சத்து திரு
ஞான சம்பந்தர்க்கு ஞானம் தந்து அருள் புரிந்தாய். உன்னை வணங்கு
கிறேன். (கவுணியர் -ஞானசம்பந்தர்)

ஞானசம்பந்தர் பிறந்த இடம். இத்தலத்திற்கு பிரமபுரம்,கழுமலம், வேணு
புரம், ஶ்ரீகாழி, கொச்சைவயம்,தோணிபுரம், வெங்குரு, புகலி, சிரபுரம்,
பூந்தராய், புறவம், சண்பை என்று பன்னிரு பெயர்கள் உண்டு.

இறைவன் : தோணியப்பர்
இறைவி    : பெரியநாயகி
தலமரம்     : பாரிஜாதம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

No comments:

Post a Comment