23 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவெண்காடு

                                             - நல்லவர்கள்
கண்காட்டு  நெற்றிக் கடவுளே என்றுதொழ
வெண்காட்டில்  மேவுகின்ற மெய்ப்பொருளே -

நல்லமனிதர்கள், நெற்றிக்கண்ணுடைய இறைவனே
என்று தொழுது துதிக்குமாறு திருவெண்காட்டில்
வீற்றிருக்கும் மெய்ப் பொருளே, உன்னை வணங்குகிறேன்.

இத்தலம் சீர்காழிக்குத் தென்கிழக்கில் 10 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ளது.
சுவேதவனம், சுவேதாரண்யம் என்ற பெயர்களை உடையது.
நவக்கிரகத் தலங்களில் புதன் கிரகத் தலம்.
சூரியன், சந்திரன், அக்னி என்ற மூன்று தீர்த்தங்கள் உள்ளன.
இவை மூன்றிலும் நீராடி இறைவனை வழிபட்டால் நினைத்த
காரியம் கை கூடும்.
நடராச சபை, சிதம்பர ரஹஸ்யம் ஆகியவை உள்ளன.
சம்பந்தர் பதிகம் மூன்றும், அப்பர் பதிகம் இரண்டும், சுந்தரர்
பதிகம் ஒன்றும் ஆக ஆறு பதிகங்கள் உள்ளன.
பட்டினத்தார் பிறந்த ஊர்.
இறைவன் : சுவேதாரண்யேஸ்வரர்
இறைவி    : இறைவி
----------------------------
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா

No comments:

Post a Comment