17 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்


திருநல்லூர்ப் பெருமணம்

                                                             -விழிப்பாலன்
கல்லூர்ப் பெருமணத்தைக் கட்டுரைக்கச் சோதிதிரு
நல்லூர்ப் பெருமணம் வாழ் நன்னிலையே -
                                                                                           
 திருஞானசம்பந்தர் திருக்கழிப்பாலை சிவபெருமானைச் சிறப்பித்து  ''கல்லூர்ப் 
பெருமணம்'' என்ற  திருப்பதிகத்தைப்  பாடித்  துதித்த  போது சோதி உருவாய்க் 
காட்சி  அளித்த  நல்லூர்ப் பரமனே- உன்னை நமஸ்கரிக்கிறேன். 

ஊர்ப்பெயர் நல்லூர். கோயில் பெருமணம். திருஞானசம்பந்தர் திருமணக் கோலத்துடன் 
கோயிலுள்ளே புக சோதி தோன்றியது. அதனுள் சம்பந்தர் கலந்து மறைந்தார்.உடன் 
சென்ற அனைவரும் சிவலோகத்தை அடைந்தனர் என்பது வரலாறு.

இத்தலம் கொள்ளிடம் புகை வண்டி நிலையத்திலிருந்து கிழக்கே 4 கிலோ மீட்டர் 
தொலைவில் உள்ளது.

No comments:

Post a Comment