7 April 2013

திருவருட்பா - தனித்திருத்தொடை


தேனே அமுதே சிவமே தவமே தெளிவேயெங்

கோனே குருவே குலமே குணமே குகனேயோ

வானே வளியே அனலே புனலே மலையே என்

ஊனே உயிரே உணர்வே எனதுள் உறைவானே.

                 - திருவருட்பிரகாசவள்ளலார்

இதய குகையில் அரசனாய், குருவாய், குணமாய், தேனாய், அமுதாய் தவமாய்,  சிவமாய்,
ஐம்பூதமாய், என் உடலாய், உயிராய், உணர்வாய் உறைகின்றாய். காத்தருள்க.

No comments:

Post a Comment