29 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கண்ணார் கோயில்

                                      - கள்ளிருக்கும்
காவின் மருவும் கணமும் திசைமணக்கும்
கோவின் மருவு கண்ணார் கோயிலாய்.

திருக்கண்ணார் கோயிலின் தேன் நிறைந்த சோலைகளில் படிகின்ற மேகங்கள் கூட,
எந்தத்திசையில் சென்றாலும் நல்ல மணத்தைப் பரப்பும். இத்தகைய சிறப்பு வாய்ந்த
திருக்கண்ணார் கோயிலில் அரசாட்சி செய்யும் சிவபெருமானே உம்மை நமஸ்கரிக்கிறேன்.
கள்-தேன்; கணம்- முகில்

இத்தலம் வைத்தீஸ்வரன் கோயிலுக்குத் தென்கிழக்கில் மூன்று கிலோமீட்டர் தொலைவில்
உள்ளது. தற்போதைய பெயர் - குறுமாணக்குடி என்பதாகும்.சம்பந்தர் பதிகம் ஒன்று உளது.

இறைவன் : கண்ணாயிரேஸ்வரர்
இறைவி    : முருகு வளர் கோதையம்மை
தலமரம்     : சரக்கொன்றை

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 



No comments:

Post a Comment