12 April 2013

திருவருட்பா - விண்ணப்பக் கலிவெண்பா

(திருவருட்பிரகாச வள்ளலார் பல சிவத்தலங்களையும் நினைந்து பாடி நம்மை அத்தலங்களுக்கு அழைத்துச் செல்கிறார்.நாமும் அவருடன் சென்று தரிசனம் செய்து மகிழலாம்)

 காப்பு - விநாயகர் வணக்கம்

அவ்வவ் விடைவந் தகற்றி அருள்தரலால்
எவ்வெவ் இடையூறும் எய்தலிலம் - தெவ்வர்தமைக்
கன்றுமத  மாமுகமும் கண்மூன்றும் கொண்டிருந்த
ஒன்று அதுநம் உள்ளம் உறைந்து.

மதம் சொரியும் யானை முகமும், கண்மூன்றும் உடைய ஒரு பொருள் உள்ளத்தில் உறைந்து,
எந்த இடையூறுகளும் வராது, அவ்வப்போது தோன்றி  அருள்தருகிறது.  (அவரை வணங்குகிறேன்)

நாளை முதல் சிவதலங்களை தரிசிக்கலாம்.





No comments:

Post a Comment