13 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள் 1

தில்லைச் சிற்றம்பலம் பெரும்பற்றப் புலியூர்

1. சொற்பெறுமெய்ஞ்  ஞானச்  சுயஞ்சோதி யாம்தில்லைச்
    சிற்சபையில்  வாழ்தலைமைத்  தெய்வமே.

 புகழ் நிறைந்த உண்மை ஞானத்தின் இயற்கைச் சோதியாய் சிற்சபையில் வாழும் தலைமையான   தெய்வமே. 
 சிற்சபை - எல்லா இயக்கங்களையும் தன்னகத்தே கொண்ட அமைப்பு


2.                                                    - நற்சிவையாம்  
  தாயின்  உலகனைத்தும்   தாங்கும் திருப்புலியூர்க்
  கோயில் அமர்ந்தகுணக்  குன்றமே -

திருப்புலியூர்க் கோயிலிலே உமையம்மை தாயாய் விளங்கி உலகனைத்தையும்  தாங்கும் குணக்குன்றாய்   விளங்குகிறாள்.
சிற்றம்பலத்தில் கூத்தராய் விளங்கும் சிவன் பெரும்பற்றப்புலியூரில் அம்மையப்பனாய் விளங்குகிறார்.
சிவை - சிவம் என்பதற்குப் பெண்பால்.

தில்லையின் வடபகுதி பெரும்பற்று.அங்குள்ள சிவன் கோயில் புலியூர். எனவே பெரும்பற்றப்புலியூர்
எனப்பட்டது.

No comments:

Post a Comment