18 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமயேந்திரப்பள்ளி

                                                -சொல்லும்
தயேந்திரர் உள்ளத் தடம்போல் இலங்கும்
மயேந்திரப் பள்ளி இன்ப வாழ்வே -

புலவர்கள் புகழ்ந்து பாடும் தயை நிறைந்தவர்களின் உள்ளமாகிய திருக்குளம் போல
விளங்கும் மயேந்திரப் பள்ளியில் ஆனந்தமாக வீற்றிருக்கும் இறைவனே.
உன்னை வணங்குகிறேன்.

மயேந்திரப்பள்ளி  என்பது இன்றைய பெயர். இத்தலம் ஆச்சாபுரத்துக்கு வடகிழக்கில்
3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஊரின் கடைக் கோடியில் உள்ளது. சம்பந்தர்
பதிகம் ஒன்று மட்டும் இத்தலத்திற்குரியது.

இறைவன் : திருமேனியழகர்
இறைவி    : வடிவாம்பிகை
தலமரம்     : தாழை

விண்ணப்பக் கலிவெண்பா - பாடல் 6 

No comments:

Post a Comment