5 April 2013

திருவருட்பா - சண்முகர் வருகை


(முருகப் பெருமானின் வருகின்ற குறிப்பறிந்து விடியற்காலையில் இளமகளிர் அப்பெருமானை வரவேற்கும் பாடல்)

காகம் கரைந்தது காலையும் ஆயிற்று
கண்ணுதல் சேயரே வாரும்
ஒண்ணுதல் நேயரே வாரும்

செங்கதிர் தோன்றிற்றுத் தேவர்கள் சூழ்ந்தனர்
செங்கல்வ ராயரே வாரும்
எங்குரு நாதரே வாரும்.

அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர்
ஆறுமுகத் தோரே வாரும்
மாறில் அகத்தோரே வாரும்

சூரியன் தோன்றினன் தொண்டர்கள் சூழ்ந்தனர்
சூரசங் காரரே வாரும்
வீரசிங் காரரே வாரும்.

வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர்
வேலாயுதத் தோரே வாரும்
காலாயுதத் தோரே வாரும்.

                                 -- திருவருட்பிரகாச வள்ளலார்

No comments:

Post a Comment