22 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பல்லவனீச்சரம்

                                                    - வாய்க்கமையச்
சொல்லவ  னீச்சரங்கு தோயஉம்ப ராம்பெருமைப்
பல்லவ  னீச்சரத்தெம்  பாவனமே -

வன்னீச்சர் - வன்மை+ நீச்சர்; நீசர் என்பது நீச்சர் என வந்தது.

தம் வாய்க்குப் பொருந்திய சொற்களைச்
சொல்லும் நீசர் ஆனாலும்  அங்கு  நீராடினால் தேவராகும் பெருமையை
அளிக்கும் பல்லவனீச்சரத்தில் கோயில் கொண்டருளும் தூய்மை வடிவான
பரம்பொருளே தங்களை நமஸ்கரிக்கிறேன்.

காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) இப்போதைய பெயர். சம்பந்தர் பதிகங்கள்
இரண்டு உள்ளன.

இறைவன் : பல்லவனேஸ்வரர்
இறைவி    : செளந்தரநாயகி
தீர்த்தம்     : காவிரி

திருவருட்பிரகாச வள்ளலார்  -  விண்ணப்பக் கலிவெண்பா

No comments:

Post a Comment